கோவையில் கருப்பு பூஞ்சை தொற்றால் 101 பேர் பாதிப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா தொற்றால் நுரையீரலில் அதிக பாதிப்பு ஏற்பட்டு தீவிரசிகிச்சை பிரிவு, ஆக்சிஜன் படுக்கைகளில் நீண்ட நாட்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் நோயாளிக ளின் எண்ணிக்கை இரண்டாம் அலையில் அதிகமாக உள்ளது.

கரோனாவின் கூடுதல் வீரியம், அதற்கேற்ப சிகிச்சையின்போது அளிக்கப்படும் மருந்துகள் என இரண்டும் இணைந்து நோய் எதிர்ப்பு திறனை குறைப்பதால் கருப்பு பூஞ்சை தொற்று பாதிப்பு தமிழகத்தில் பரவலாகி வருகிறது.

கோவை மாவட்டத்தில் மட்டும் நேற்றுமுன்தினம் வரை 101 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறையினர் கூறியதாவது:

பொதுவாக நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், ஸ்டீராய்டு மருந்து உட்கொள்பவர்கள், கட்டுப்பாடற்ற சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களை கருப்பு பூஞ்சை எளிதில் தொற்றுகிறது.

எனவே, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை முடிந்து வீடு திரும்புபவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

மேலும், தேவைப்படுவோ ருக்கு மட்டுமே ஸ்டீராய்டு மருந்துகளை அளிக்க வேண்டும்.

மற்றவர்களுக்கு அதிகப்படி யான ஸ்டீராய்டு மருந்துகள், நோய் எதிர்ப்பு திறனில் மாறுதல் ஏற்படுத்தக்கூடிய மருந்துகளை பயன்படுத்தக்கூடாது.

யாருக்கேனும் கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதியானால் உடனடியாக சுகாதாரத்துறைக்கு தெரிவிக்க வேண்டும் என மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம்.

இவ்வாறு தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

7 hours ago

சுற்றுச்சூழல்

18 mins ago

சுற்றுலா

30 mins ago

தமிழகம்

1 hour ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

மேலும்