சேலம்: கர்நாடக மாநிலத்தில் இருந்து சேலம் வழியாக சரக்கு வாகனம் மற்றும் காரில் கடத்த முயன்ற ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை வாகனங்களுடன் போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 4 பேரை கைது செய்தனர்.
சேலம் அடுத்த கருப்பூர் சுங்கச் சாவடி அருகே போலீஸார் தொடர் கண்காணிப்பு மற்றும் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை பெங்களூருவில் இருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர்.
இதில், சரக்கு வாகனத்தில் சுமார் ரூ.2 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கடத்த முயன்றது தெரிந்தது. மதுபாட்டில்களுடன் சரக்கு வாகனத்தை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த சுப்ரதீபன் (24), மணீஸ்வரன் (23) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல, தெலங்கானா மாநிலத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு சென்ற காரை நிறுத்தி போலீஸார் சோதனை செய்தனர். இதில், சுமார் ரூ.1.75 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கடத்த முயன்றது தெரிந்தது.
இதையடுத்து, காருடன் மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸார், கன்னியாகுமரியைச் சேர்ந்த முத்துவேல் (35), நாகர்கோவிலைச் சேர்ந்த ரமேஷ் (26) ஆகியோரை கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
உலகம்
2 hours ago
ஆன்மிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
3 hours ago
இந்தியா
3 hours ago