விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட வீரத்தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர்கள் கட்சியின் நிர்வாகிகள் நேற்று ஆட்சியர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.அம் மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு கரோனா முதல் அலையினால் எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டது. அதிலிருந்து இன்னும் மீள முடியாத நிலையில் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவினால் எங்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வீட்டு வாடகை, கடை வாடகை, குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, பிள்ளைகளின் படிப்பு செலவு போன்ற அடிப்படை வசதியின்றி பாதிக்கப்பட்டு வருகிறோம். தமிழக அரசு, எங்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும். தினசரி சம்பாதித்து எங்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் சூழ்நிலையில் உள்ளதால் அரசு எங்களின் ஏழ்மை நிலையை கருதி காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மட்டும் சலூன் கடைகளை திறக்க அனுமதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
15 mins ago
தமிழகம்
28 mins ago
தமிழகம்
56 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago