முகக்கவசம் அணியாமல் வந்து காவலரைத் தாக்கிய 4 பேர் கைது :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி: புதுச்சேரியில் மதுக்கடைகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்ட நிலையில் அரியாங்குப்பத்தில் போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது கடலூர் சாலையில் உள்ள ஒரு திருமண மண்டபம் முன்பு முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளியின்றி கும்பலாக நின்றிருந்தவர்களை ரோந்து காவலரான முனியாண்டி எச்சரித்துள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் காவலர் முனியாண்டியை அக்கும்பல் ஆபாசமாக திட்டியதோடு, தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் காயமடைந்த காவலர் உடனே உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

இதைடுத்து தெற்கு எஸ்பி லோகேஸ்வரன், இன்ஸ்பெக்டர் தனசெல்வம் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் காவலரை தாக்கிய கும்பலை அடையாளம் கண்ட போலீஸார் அரியாங்குப்பம் டோல்கேட் பல்லவன் வீதி சூர்யா (எ) சூர்யகுமார்(25), ஸ்டீபன்ராஜ்(27), சேரன் வீதி சிவநேசன் (18), வசந்தகுமார்(23) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கரோனா பரிசோதனை முடிவுக்கு பிறகு, அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

உலகம்

6 hours ago

வாழ்வியல்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்