கோவையில் அரசு மருத்துவமனைகளுக்கு பயன்படுத்த - அதிமுக சார்பில் 25 ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கல் :

By செய்திப்பிரிவு

கோவை மாவட்ட அதிமுக சார்பில்அரசு மருத்துவமனைகளில் பயன் படுத்தும் வகையில் 25 ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகள் மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜனிடம் நேற்று வழங்கப்பட்டன.

அதைத்தொடர்ந்து, தொண்டா முத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் மாவட்டஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கரோனாவால் இறந்தவர்களுக்கு அரசின் சார்பில்வழங்கப்படும் இழப்பீடு பெறுபவர்களின் எண்ணிக்கையை கட்டுப் படுத்த வேண்டும் என்பதற்காகவே, பரிசோதனை முடிவில் ‘பாசிடிவ்' வந்தவர்களுக்கு ‘நெகடிவ்' என சான்று வழங்கி மக்களை ஏமாற்றுகின்றனர்.

எனவே, அதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவமனைகளில் படுக்கை வசதி குறித்த உண்மை நிலையை கட்டுப்பாட்டு மையத்தின் மூலம் வெளிப்படையாக தெரிவிக்கவேண்டும். தனியார் மருத்துவமனைகளில் கரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து தடுத்து நிறுத்த வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அப்போது, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், பி.ஆர்.ஜி.அருண்குமார், ஏ.கே.செல்வராஜ், செ.தாமோதரன், அம்மன் கே.அர்ச்சுணன், அமுல்கந்தசாமி, வி.பி.கந்தசாமி, கே.ஆர்.ஜெயராம் ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

சினிமா

2 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

உலகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

6 hours ago

க்ரைம்

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்