முதல்வர் நிவாரண நிதிக்கு எஸ்ஆர்எம்யூ ரூ.1.70 கோடி :

By செய்திப்பிரிவு

முதல்வர் நிவாரண நிதிக்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம் சார்பில், ரூ.1.70 கோடி நிதி வழங்கப்பட்டது.

கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையேற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.கண்ணையா சந்தித்து, ரயில்வே ஊழியர்கள் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.70 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது, எஸ்ஆர்எம்யூ தலைவர் சி.ஏ.ராஜா தர், கண்ணையாவின் மகனும், பாலாஜி குழும நிறுவனங்களின் தலைவருமான கே.பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

மேலும், கண்ணையாவின் மகள் டாக்டர் கண்ணன் பிரேமா, தனிப்பட்ட முறையில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.

இத்தகவல் எஸ்ஆர்எம்யூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

43 mins ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

வாழ்வியல்

10 hours ago

தமிழகம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

தமிழகம்

12 hours ago

ஓடிடி களம்

13 hours ago

மேலும்