முதல்வர் நிவாரண நிதிக்கு தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கம் சார்பில், ரூ.1.70 கோடி நிதி வழங்கப்பட்டது.
கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக, முதல்வர் நிவாரண நிதிக்கு அனைவரும் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதையேற்று பல்வேறு தரப்பினரும் நிதி வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை தெற்கு ரயில்வே மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்.கண்ணையா சந்தித்து, ரயில்வே ஊழியர்கள் சார்பில் முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.1.70 கோடிக்கான காசோலையை வழங்கினார். அப்போது, எஸ்ஆர்எம்யூ தலைவர் சி.ஏ.ராஜா தர், கண்ணையாவின் மகனும், பாலாஜி குழும நிறுவனங்களின் தலைவருமான கே.பிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
மேலும், கண்ணையாவின் மகள் டாக்டர் கண்ணன் பிரேமா, தனிப்பட்ட முறையில் ரூ.1 லட்சத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இத்தகவல் எஸ்ஆர்எம்யூ வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
க்ரைம்
43 mins ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
வாழ்வியல்
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
12 hours ago
ஓடிடி களம்
13 hours ago