கோவை மாவட்டம் ஆனைமலை அடுத்த சோமந்துறை மற்றும் தென்சித்தூர் ஊராட்சிகளில் சுமார் 7,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இங்கு, அதிகப்படியான நபர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டது. தினமும் சராசரியாக 5-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கடந்த ஒரு மாதத்தில் 3 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
இதையடுத்து இரு கிராமங்களிலும் சிறப்பு காய்ச்சல் தடுப்பு முகாம் நடத்தப்பட்டு, 120 பேரிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு, கரோனா பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், கிராமத்தின் ஆறு வீதிகள் அடைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. இதை யடுத்து இரண்டு கிராமங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, சுகாதாரப் பணிகள் நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago
தமிழகம்
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
5 hours ago
விளையாட்டு
7 hours ago
இந்தியா
7 hours ago
தமிழகம்
7 hours ago
தமிழகம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
8 hours ago
ஜோதிடம்
9 hours ago