மதுரையில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்தாலும் உயிரிழப்புகள் குறையவில்லை.
மதுரை மாவட்டத்தில் மார்ச் 15 முதல் தற்போது வரை 46,129 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 33,115 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். ஒரு வாரத்துக்கு முன்பு வரை தினமும் 1,500-க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். தற்போது பாதிப்பு 500-க்கும் கீழாகக் குறையத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 441 பேர் பாதிக்கப்பட்டனர். தினமும் 1,500-க்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வருகின்றனர். இருப்பினும் உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது வரை குறையவில்லை. மதுரையில் கரோனா தொற்று 1,500 முதல் 1,700 வரை பரவியபோது 15 முதல் 18 பேர் உயிரிழந்தனர். தற்போதும் அதே விகிதத்தில் உயிரிழக்கின்றனர்.
நேற்று முன்தினம் இந்த தொற்றுக்கு 14 பேர் உயிரிழந்தனர். அதனால் மாவட்ட நிர்வாகம் உயிரிழப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண் டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
8 hours ago