இளைஞர் கொலை வழக்கில் 6 பேர் கைது :

By செய்திப்பிரிவு

அரக்கோணம்: ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ராஜாபாதர் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திக் (36). இவர், கடந்த ஆண்டு கோகுல் என்ற இளைஞர் கொலை வழக்கில் கைதாகி குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த 4-ம் தேதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

இதற்கிடையில், அரக்கோணம் போலாட்சியம்மன் கோயில் அருகேயுள்ள நண்பர் மைகண்ணன் (37) என்பவரின் வீட்டு மாடியில் மதுபானம் அருந்த கார்த்தி நேற்று முன்தினம் பிற்பகல் சென்றுள்ளார். அப்போது, வீட்டின் மாடிக்குச் சென்ற கும்பல் கார்த்திக்கை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இதுகுறித்த தகவலின்பேரில் அரக்கோணம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் மனோகரன் மேற்பார்வையில் அரக்கோணம் நகர காவல் நிலைய ஆய்வாளர் கோகுல்ராஜ் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், கார்த்திக் கொலை வழக்கில் அவரது நண்பரும் மதுபானம் குடிக்க அழைத்துச் சென்றவருமான மைகண்ணன் என்பவரை காவல் துறையினர் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர். விசாரணையில், கடந்த ஆண்டு நடந்த கோகுல் கொலைக்கு பழிவாங்கவே சசிகுமார் கும்பல் கொலை செய்ததாகவும், அதற்கு தான் உதவி செய்ததாக ஒப்புக்கொண்டார். அவர் கொடுத்த தகவலின்பேரில் முக்கிய குற்றவாளியான சசிகுமார் (27), சுவால்பேட்டையைச் சேர்ந்த ஜெகன் (23), கண்ணன் (24), குருபிரசாத் (25), அசோக்நகரைச் சேர்ந்த தியாகராஜன் (25) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

சுற்றுலா

23 mins ago

தமிழகம்

34 mins ago

தமிழகம்

41 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

6 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்