திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த வள்ளிவாகை ஊராட்சியில் உலக சுற்றுச்சூழல் தின விழா நேற்று நடைபெற்றது.
மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி தலைமை வகித்து, வேடியப்பன் கோயில் அருகே மரக்கன்றை நட்டு, 200-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசும்போது, “தி.மலை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரக்கன்றுகளை நட வேண்டும். கிராமங்களை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்” என்றார். முன்னதாக, ஊராட்சி மன்றத் தலைவர் சசிகலா குமார் வரவேற்றார். துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமி, உதவி பொறியாளர் ரவிச்சந்திரன், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி உட்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில், ஊராட்சி செயலாளர் கார்த்தி நன்றி கூறினார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
வாழ்வியல்
6 hours ago
தமிழகம்
7 hours ago
ஆன்மிகம்
6 hours ago
கருத்துப் பேழை
7 hours ago