மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே மின்சாரம் தாக்கி கட்டிட மேஸ்திரி உயிரிழந்தது குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (40). இவர், கட்டிட மேஸ்திரியாக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மாலா என்பவர் பிரசவத்துக்காக தாய் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டில் தனியாக வசித்து வந்த பன்னீர்செல்வம், நேற்று முன்தினம் இரவு மின் விளக்கு எரியாததால் அதனை சரி செய்ய முயன்றுள்ளார். அப்போது, மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தினர், பன்னீர்செல்வத்தை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்தபோது வரும் வழியிலேயே பன்னீர்செல்வம் உயிரிழந்துவிட்டது தெரியவந்தது. இது தொடர்பான தகவலின்பேரில் வாணியம்பாடி கிராமிய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

க்ரைம்

21 mins ago

சுற்றுச்சூழல்

27 mins ago

இந்தியா

58 mins ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

வர்த்தக உலகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்