மஞ்சளாறு அணையில் இறுதி வெள்ள எச்சரிக்கை :

By செய்திப்பிரிவு

மஞ்சளாறு அணை முழுக் கொள்ளளவை எட்ட உள்ளதால் இறுதி வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கோடை மழை பெய்து வருகிறது. இதனால் தேவதானப்பட்டி அருகே உள்ள மஞ்சளாறு அணை நீர் மட்டம் 42 அடியில் இருந்து சிறிது சிறிதாக உயர்ந்து 55 அடியை எட்டியது. தொடர்ந்து நீர்வரத்து உள்ளதால் முழுக் கொள்ளளவான 57 அடியை எட்டும் நிலை உள்ளது.

அணையின் மொத்த கொள்ளளவான 487.35 மில்லியன் கன அடியில் தற்போது 435.32 மில்லியன் கன அடி நீர் உள்ளது. நீர்வரத்து விநாடிக்கு 192 கன அடியாக உள்ளது.

எனவே நேற்று முன்தினம் இரவு மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. அணையில் இருந்து வெளியேறும் தண்ணீர் கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி, திண்டுக்கல் மாவட்டம் வத்தல குண்டு, சிவஞானபுரம் வழியாகச் செல்வதால் அப்பகுதி கரையோர மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என பொதுப்பணித்துறையினர் எச்சரித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுச்சூழல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

சுற்றுலா

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்