மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணம் வழங்கியதில் முறைகேடு : முதல்வருக்கு பார்வையற்றோர் சங்கத்தினர் மனு

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவார ணமாக உணவுப் பொருட்கள் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக முதல்வருக்கு பார்வையற்றோர் மறுவாழ்வு நலச் சங்கத்தினர் புகார் மனு அனுப்பியுள்ளனர்.

மதுரை மாவட்டத்தில் 30 ஆயிரம் மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டையுடன் பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு கடந்தாண்டு கரோனா பரவலின்போது நிவாரண உதவிகள் வழங்க மாவட்டத்துக்கு முதல் கட்டமாக ரூ.10 லட்சம், 2-ம் கட்டமாக ரூ.30 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சத்தை அரசு ஒதுக்கியது.

இந்நிலையில் பார்வையற் றோர் மறுவாழ்வு நலச் சங்கத் தலைவர் பி.குமார், முதல்வருக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

கரோனா நிவாரணமாக ஒரு நபருக்கு ரூ.600 மதிப்புள்ள உணவுப் பொருட்களை 2,500 பேருக்கு மட்டுமே வழங்கினர். மீதமுள்ளோருக்கு இரண்டாம் கட்டமாக வழங்கப்படும் என தெரிவித்தனர். ஓராண்டு முடிந்தும் இதுவரை வழங்கவில்லை.

இதனால் அரசு வழங்கிய ரூ.40 லட்சத்தில் முறைகேடு நடந்துள் ளதாகப் புகார் எழுந்துள்ளது. இது குறித்து அப்போதைய ஆட்சியர் அன்பழகனிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.

மேலும் கடந்தாண்டு கரோனா காலகட்டத்தில் மாற்றுத் திறனா ளிகளுக்கு மருந்துப் பொருட்கள் வாங்க ரூ.1 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதிலும், முதுகுத் தண்டுவடம் பாதித்த மாற்றுத் திறனாளிகளுக்கு தரமற்ற `பேக் ரெஸ்ட்’ படுக்கையை வாங்கிக் கொடுத்து போலி கணக்கு எழுதப்பட்டுள்ளது. எனவே மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் மீது விசாரணை நடத்திட முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயசீலியிடம் கேட்டபோது, உணவுப் பொருட்கள் முறையாகத்தான் வழங்கப்பட்டுள்ளன. முறைகேடு ஏதும் இல்லை என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

தமிழகம்

25 mins ago

சினிமா

21 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

45 mins ago

க்ரைம்

51 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

56 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்