சிவகங்கை அரசு மருத்துவமனையில் - பொது அறுவை சிகிச்சை நிறுத்தம் : பிற வார்டுகளும் கரோனா நோயாளிகளுக்கு ஒதுக்கீடு

By செய்திப்பிரிவு

சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா நோயாளிகள் அதிகரித்து வருவதால், பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டன.

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா தொற்றால் 13 ஆயி ரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். தற்போது 1,900-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெறுகின்றனர். சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மட்டும் கரோனா தொற்று மற்றும் அறிகுறியுடன் 700 பேர் சிகிச்ைசயில் உள்ளனர். அறிகுறி யுடன் வருவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

இதையடுத்து மற்ற நோய்கள் தொடர்பான வார்டுகளில் பெரும் பாலானவை கரோனா வார்டாக மாற்றப்பட்டுள்ளன.

பிற பிரிவு மருத்துவர்களும் கரோனா பணிக்கு மாற்றப்பட்டனர். தற்போது மற்ற நோய்கள் பாதிப்புள்ள உள்நோயாளிகள் அனுமதிக்கப்படுவதில்லை. பொது அறுவை சிகிச்சைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, ‘அவசரமாக செய்யக் கூடிய குடல்வால், கர்ப்பப்பை அறுவைச் சிகிச்சைகள் மட்டும் மேற்கொள்ளப்படுகின்றன. தள்ளிபோடக் கூடிய அறுவை சிகிச்சைகள் செய்யப்படுவதில் லை. அவசியம் உள்ளவர் கள் புறநோயாளிகள் பிரிவு மருத்துவர்களிடம் ஆலோசனை பெறலாம் என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

9 mins ago

விளையாட்டு

40 mins ago

இணைப்பிதழ்கள்

52 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

உலகம்

3 hours ago

இந்தியா

4 hours ago

சினிமா

3 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்