கோவையில் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு : வேளாண் பல்கலை ஆராய்ச்சி மையம் தகவல்

By செய்திப்பிரிவு

கோவையில் நேற்று முன்தினம் இரவு பெய்யத் தொடங்கிய மழை நேற்று மதியம் வரை கொட்டித் தீர்த்தது. மாவட்ட நிர்வாகத்தினர் நேற்று வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த 24 மணி நேரத்தில் அன்னூரில் 3 மி.மீ. மேட்டுப்பாளையத்தில் 5, சின்கோனாவில் 65, சின்னக் கல்லாரில் 69, வால்பாறை பி.ஏ.பி.யில் 70, வால்பாறை தாலுகாவில் 63, சோலையாறு பகுதியில் 99, ஆழியாறு பகுதியில் 13.4, சூலூரில் 5, பொள்ளாச்சியில் 17, கோவை தெற்கில் 10, விமான நிலையத்தில் 8.2, பெரியநாயக்கன்பாளையத்தில் 7.2, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் 9 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

கோவை வேளாண் பல்கலைக் கழக காலநிலை ஆராய்ச்சி மையத்தினர் கூறும் போது, ‘‘அரபிக்கடலில் உருவான புயல் காரணமாக கோவை, நீலகிரி மாவட்டத்துக்கு 16-ம் தேதி(இன்று), 17-ம் தேதி (நாளை) ஆகிய இரண்டு நாட்கள் மழைக்கு வாய்ப்புள்ளது.

மழை காரணமாக கோவையில் அதிகபட்ச வெப்பநிலை 81 டிகிரி பாரன்ஹீட் முதல் 90 டிகிரிபாரன்ஹீட் வரையும், குறைந்தபட்ச வெப்பநிலை 68 டிகிரி பாரன்ஹீட் முதல் 73 டிகிரி டிகிரி பாரன்ஹீட் வரையும் இருக்கும்.

காற்றின் வேகம் 15 கிலோ மீட்டர் முதல் 40 கிலோ மீட்டர் வரை இருக்க வாய்ப்புள்ளது. காற்றின் ஈரப்பதம் அதிகரித்து காணப்படும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

இந்தியா

25 mins ago

தமிழகம்

11 mins ago

சினிமா

36 mins ago

இணைப்பிதழ்கள்

37 mins ago

வணிகம்

22 mins ago

தமிழகம்

42 mins ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

55 mins ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

மேலும்