தமிழகத்தில் மூன்று நாட்களில் ஆக்சிஜன் பற்றாக்குறை போக்கப் படும் என நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உறுதிபடக் கூறினார்.
மதுரை யாதவர் கல்லூரியில் அமைக்கப்பட்ட சித்த மருத்துவ கரோனா சிகிச்சை மையத்தை வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆட்சியர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் விசாகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பின்னர் அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
கரோனா பாதிப்பில் மதுரை இன்று இக்கட்டான நிலையில் உள்ளது. முதல் அலையை விட மிக அதிகமான தொற்று பாதிப்பு மதுரையில் ஏற்பட்டுள்ளது. தற்போதைய பாதிப்புக்குத் தேவையான வசதிகள் என்னென்ன என்பதை ஆய்வு செய்து அதை உடனடியாக நிறைவேற்றவுள்ளோம்.
மருத்துவமனைகள் நிரம்பி விட்டன. மருத்துவர்கள், செவிலியர்கள் எண்ணிக்கையை அதிகரித்தால் மட்டுமே படுக்கை வசதிகளை அதிகப்படுத்த முடி யும். இறுதியாண்டு மருத்துவ மாணவர்கள், வெளிநாட்டில் படித்துவிட்டு நமது நாட்டில் பணியாற்றுவதற்கான தேர்வை (equivalence exam) எழுதாமல் இருப்போருக்கு தற்காலிக விதி விலக்கு அளித்து பணியமர்த்த ஏற்பாடு செய்துள்ளோம்.
ஆக்சிஜன், பரிசோதனைக் கருவிகள், மருந்துகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்களின் தேவை அதிகமாக உள்ளது. இதை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய உள்ளோம். சித்த மருத்துவம் உள்ளிட்ட பிற பாரம்பரிய மருத்துவ முறைகளை யும் கரோனா சிகிச்சைக்கு பயன் படுத்த உள்ளோம்.
ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் தனி கண்காணிப்பு அதிகாரிகள் குழுவை அமைத்து துரிதமாக ஆக்சிஜன் வசதியை ஏற்படுத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஸ்டெர் லைட் ஆலையில் இருந்து ஆக்சி ஜன் வருவது தாமதமாகிறது. 3 நாட்களில் தமிழகத்தில் ஆக்சி ஜன் பற்றாக்குறையைப் போக்கி விடுவோம், என்று கூறினார்.
அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது: மதுரையில் ‘கரோனா’ தொற்றுநோயை கட்டுப்படுத்த தேவையான முன்னேற்பாடு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட குழந் தைகள், கர்ப்பிணிகளுக்கு தனி வார்டுகள் உருவாக்க ஆலோ சிக்கிறோம்.
மதுரையிலேயே நிதி அமைச்சர் உள்ளார். அதனால், மதுரைக்கு தேவையான வசதிகளைச் செய்வதற்கான நிதி ஒதுக் கீடு விரைவாகப் பெறப்படும். கூடுதலாக 500 ஆக்சிஜன் படுக் கைகள் மதுரையில் ஏற்பாடு செய்ய உள்ளோம். வீடு வீடாகச் சென்று பரிசோதனை செய்து காய்ச்சல் நோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சை வழங்க உள்ளோம்,’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
2 mins ago
இந்தியா
6 mins ago
இந்தியா
12 mins ago
விளையாட்டு
3 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
4 hours ago
இந்தியா
5 hours ago
தமிழகம்
6 hours ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
க்ரைம்
6 hours ago
உலகம்
7 hours ago