கடந்த ஆண்டு கரோனா பாதிப்பின்போது, மதுரையில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இந்த மூலிகைப் பொடியை ஜோதி கிருஷ்ணன் வழங்கினார். கரோனா 2-வது அலை பரவல் அதிகரித்த நிலையில் மீண்டும் மூலிகைப் பொடி வழங்கும் பணியைத் தொடங்கியுள்ளார்.
இது குறித்து தன்னார்வலர் ஜோதிகிருஷ்ணன் கூறியது: மனித உடலில் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் அசுவகந்தா, தாளிசாதி சூரணம், பிரமானந்த பைரவம், மகாசுதர்சனம், பாலசஞ்சீவி போன்ற மூலிகை பொடி, மாத்திரைகளைச் சேர்த்து தயாரித்த மூலிகைப் பொடியை கரோனா நோயாளிகளுக்கு வழங்கியதில் நல்ல பலன் கிடைத்தது. அதனால், இலவசமாக வழங்கி வருகிறோம். மூலிகைப் பொடியை இலவசமாகப் பெற விரும்புவோர் 7358816622 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம், என்றார். மதுரை அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் லில்லி கிரேஸ் உதவியுடன் சாய் டிரஸ்ட் மூலமாக இலவசமாக ஜோதி கிருஷ்ணன் இந்த மூலிகைப் பொடியை வழங்கி வருகிறார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
13 mins ago
க்ரைம்
20 mins ago
சினிமா
26 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
சினிமா
2 hours ago
சினிமா
2 hours ago
உலகம்
2 hours ago
சினிமா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
3 hours ago