குடியாத்ததம் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் செந்தில். இவரது மனைவி பூனம். இவர்கள், இருவரும் கல்லப்பாடி மோட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தன. பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இணைப்பிதழ்கள்
6 mins ago
இந்தியா
26 mins ago
சுற்றுலா
18 mins ago
தமிழகம்
54 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
க்ரைம்
2 hours ago
இந்தியா
2 hours ago
ஓடிடி களம்
9 mins ago