ராணுவ வீரர் வீட்டில் : 15 பவுன் நகைகள் துணிகர திருட்டு :

By செய்திப்பிரிவு

குடியாத்ததம் அருகே ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் தங்க நகைகளை திருடிய மர்ம நபர்கள் குறித்து காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

குடியாத்தம் அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராணுவ வீரர் செந்தில். இவரது மனைவி பூனம். இவர்கள், இருவரும் கல்லப்பாடி மோட்டூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சனிக்கிழமை சென்றுவிட்டு நேற்று முன்தினம் இரவு வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த பொருட்கள் சிதறிக்கிடந்திருந்தன. பீரோவில் இருந்த சுமார் 15 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலறிந்த குடியாத்தம் நகர காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இணைப்பிதழ்கள்

6 mins ago

இந்தியா

26 mins ago

சுற்றுலா

18 mins ago

தமிழகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஓடிடி களம்

9 mins ago

மேலும்