தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே குடும்பப் பிரச்சினையில் கணவன், மனைவி கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டனர்.
ஆண்டிபட்டி அருகே பெருமாள்பட்டியைச் சேர்ந்தவர் சசிக்குமார் (29). லாரி ஓட்டுநர். இவரது மனைவி விஜயலட்சுமி (22). கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு விக்னேஷ் (2) என்ற குழந்தை உள்ளது. கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வசித்து வந்தனர். விஜயலட்சுமி பெருமாள்பட்டியில் உள்ள தோட்டத்து வீட்டில் தனது பெற்றோருடன் வசித்தார். இங்கு நேற்று மாலை சசிக்குமார் வந்துள்ளார். அவருக்கும், விஜயலட்சுமிக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.
இதில் நான் சாகப்போகிறேன் என்று கூறியபடி விஜயலட்சுமி திடீரென அருகில் உள்ள கிணற்றில் குதித்தார். அவருக்குப் பின்னால் வேகமாகச் சென்ற சசிக்குமாரும் குதித்து விட்டார். குறைந்த அளவு தண்ணீர் இருந்த 150 அடி ஆழக் கிணற்றில் குதித்ததால் இருவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
தீயணைப்புத் துறையினர் இருவரது உடலையும் நேற்று இரவு மீட்டனர். ராஜதானி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
34 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago