புதுச்சேரியில் புதிதாக 1,510 பேருக்கு கரோனா : மேலும் 18 பேர் உயிரிழப்பு

By செய்திப்பிரிவு

புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 1,510 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் 18 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் இறப்பு எண்ணிக்கை 900ஐ கடந்துள்ளது. மேலும் தற்போது 12,430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத் துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:

புதுச்சேரி மாநிலத்தில் 7,150 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் புதுச்சேரி – 1,190, காரைக்கால் - 149, ஏனாம் – 129, மாஹே - 42 பேர் என மொத்தம் 1,510 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும், புதுச்சேரியில் 17 பேர், ஏனாமில் ஒருவர் என மொத்தம் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 901 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு விகிதம் 1.35 ஆக உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 66 ஆயிரத்து 627 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது மருத்துவமனைகளில் 2,036 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 10,394 பேரும் என மொத்தமாக 12, 430 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று 779 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 53 ஆயிரத்து 296 (79.99 சதவீதம்) ஆக உள்ளது.

இதுவரை 8 லட்சத்து 31 ஆயிரத்து 923 கரோனாபரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. 7 லட்சத்து 52 ஆயிரத்து 684 பேருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்துள்ளது.

மேலும், சுகாதார பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், பொதுமக்கள் என மொத்தம் 2 லட்சத்து 8 ஆயிரத்து 731 பேருக்கு (2 தவணை உட்பட) தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

42 mins ago

ஜோதிடம்

58 mins ago

விளையாட்டு

4 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

7 hours ago

வணிகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

க்ரைம்

8 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்