மறை மாவட்ட முன்னாள் ஆயர் : அந்தோணி ஆனந்தராயர் கரோனாவால் உயிரிழப்பு :

By செய்திப்பிரிவு

புதுச்சேரி-கடலூர் மறை மாவட்ட முன்னாள் ஆயர் அந்தோணி ஆனந்தராயர், கரோனா தொற்று ஏற்பட்டு சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்தார்.

அவரது இறுதிச்சடங்கு, புதுச்சேரியில் நேற்று மாலை நடைபெற்றது. அவரது உடல், புதுச்சேரி ஜென்மராக்கினி அன்னை பேராலயத்தில் பொது மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணிக்கு பேராலயத்தின் அருகேகல்லறையில், புதுச்சேரி-கடலூர் மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி பீட்டர்ஆபீர் தலைமையில் அடக்கத் திருப்பலிசெய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. கரோனா விதிமுறைகளை பின்பற்றி, தனிமனித இடைவெளியுடன் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

31 mins ago

இந்தியா

1 min ago

தமிழகம்

35 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

2 hours ago

உலகம்

3 hours ago

மேலும்