தொகுதி மாறி போட்டியிட்டு வென்ற அதிமுக வேட்பாளர்கள் :

By செய்திப்பிரிவு

ஏற்கெனவே வென்ற தொகுதியை விட்டு, வேறு தொகுதியில் போட்டியிட்ட கோவை வடக்கு, கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.

கடந்த 2016-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், அதிமுக சார்பில் கோவை தெற்கு தொகுதியில் அம்மன் கே.அர்ச்சுணனும், கோவை வடக்கு தொகுதியில் பி.ஆர்.ஜி அருண்குமாரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். 2021 சட்டப்பேரவைத் தேர்தலிலும், மீண்டும் அதே தொகுதிகளில் களம் காணுவதற்காக தீவிரமாக பணியாற்றிவந்தனர்.

இந்நிலையில், அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கோவை தெற்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. பாஜக வேட்பாளராக அக்கட்சியின் தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் அறிவிக்கப்பட்டார்.இதனால், அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏவுக்கு கோவை வடக்குத்தொகுதி ஒதுக்கப்பட்டது.அங்குபோட்டியிட திட்டமிட்டிருந்த அத்தொகுதியின் எம்.எல்.ஏ பி.ஆர்.ஜி.அருண்குமாருக்கு கவுண்டம்பாளையம் தொகுதி ஒதுக்கப்பட்டது.

இதில் கோவை வடக்குத் தொகுதியில் அம்மன் கே.அர்ச்சுணன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் வ.ம.சண்முகசுந்தரத்தைவிட 4,001 வாக்கு கள் அதிகம் பெற்று வெற்றிபெற்றார்.

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி அருண்குமார் 1,34,981 வாக்குகள் பெற்று, திமுக வேட்பாளர் பையா என்ற கிருஷ்ணனை தோற்கடித்தார். திமுக வேட்பாளர் 1,24,557 வாக்குகள் பெற்றார்.

தொகுதி மாறி போட்டியிட்ட நிலையிலும், அதிமுக வேட்பாளர்கள் வெற்றியை தக்கவைத்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

29 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்