ஒரே தொகுதியையும் இழந்த திமுக :

By செய்திப்பிரிவு

கடந்த 2016-ம் சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்று, நா.கார்த்திக் எம்.எல்.ஏ. ஆனார். எதிர்க்கட்சி எம்.எல்.ஏவாக இருந்தாலும், பொதுமக்களை அடிக்கடி சந்தித்து குறைகளை கேட்டு நிவர்த்தி செய்வது, மக்கள் நலன் சார்ந்த போராட்டங்களில் ஈடுபடுவது என தொடர்ந்து செயலாற்றி வந்தார். இதைத் தொடர்ந்து, சிங்காநல்லூரில் 2-வது முறையாக களம் கண்டார்.

ஆனால் அதிமுக வேட்பாளர் கே.ஆர்.ஜெயராமிடம் தோல்வியடைந்தார். இம்முறை நா.கார்த்திக் வெற்றி பெற்றால், அவர் அமைச்சராவார் என திமுகவினர் கூறிவந்தனர். ஆனால், எதிர்பாராத விதமாக தோல்வியை தழுவியதால் அவரது ஆதரவாளர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

இதற்கிடையே, நா.கார்த்திக் நேற்று வெளியிட்ட அறிக்கையில்,‘‘சிங்காநல்லூர் தொகுதியில் உதயசூரியன் சின்னத்துக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி. தொகுதி மக்களுக்காக என்றென்றும் பாடுபடுவேன்’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

தமிழகம்

16 mins ago

சினிமா

45 mins ago

க்ரைம்

26 mins ago

தமிழகம்

48 mins ago

தமிழகம்

39 mins ago

தொழில்நுட்பம்

21 mins ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்