குடியாத்தம் நகரில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம் 1-ம் தேதி கெங்கையம்மன் சிரசு திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் திருவிழா நடத்தப்படவில்லை. அரசு விதிகளின்படி வழக்கமான பூஜைகளுடன் கோயில் வளாகத்திலேயே சிரசு திருவிழா நடைபெற்றது. இந்த ஆண்டுக்கான திருவிழா ஏற்பாடுகள் நடைபெற்ற நிலை யில் கரோனா இரண்டாம் அலையால் மீண்டும் தடை ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்த ஆண்டும் பக்தர்கள் இல்லாமல் கோயில் நடைமுறைப்படி திருவிழா நடத்த அனுமதிக்க வேண்டும் என விழாக் குழுவினர் சார்பில் கோரிக்கை வைத்தனர். அதன்படி, அரசின் வழிகாட்டுதலோடு கோயில் நடைமுறைகளை பின்பற்றி திருவிழா நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, இந்த ஆண்டும் அம்மன் சிரசு ஊர்வலம் ரத்து செய்யப்பட்டு கோயில் வளாகத்தில் எளிமையாக நடத்த உள்ளனர்.
இந்நிலையில், சிரசு திருவிழாவை முன்னிட்டு கோயிலில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நள்ளிரவு தொடங்கி நேற்று அதிகாலை வரை எளிமையான முறையில் நடைபெற்றது. குறைந்த பக்தர்களுடன் நடைபெற்ற நிகழ்ச்சியில் அலங்கரிக்கப்பட்ட கரகம் கோயில் வளாகத்தை சுற்றிவந்து மூலவர் சன்னதியில் வைக்கப்பட்டு காப்பு கட்டப்பட்டது. வரும் 14-ம் தேதி தேர்த்திருவிழாவும், வரும் 15-ம் தேதி சிரசு திருவிழாவும், வரும் 17-ம் தேதி பூப்பல்லக்கு திருவிழாவும் எளிமையான முறையில் கோயில் வளாகத்தில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முக்கிய செய்திகள்
தமிழகம்
4 mins ago
சினிமா
30 secs ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
24 mins ago
க்ரைம்
30 mins ago
க்ரைம்
39 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago