மதுரையில் இரு குழந்தைகளுடன் திடீரென பெற்றோர் மாயமானதாக புகார் செய்யப்பட்டுள்ளது.
கீழச்சந்தைப்பேட்டை காதர்கான் பட்லர் சந்து பகுதியைச் சேர்ந்த ஆபிதா பேகம். இவர் தெப்பக்குளம் காவல் நிலையத்தில் கொடுத்த புகார்: எனது மகன் கமர்தீனுக்கு (38) வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டு மன உளைச்சலில் இருந்தார். இந்நிலையில், தனது மனைவி சமீம் பானு (30), மகள் அஞ்சும் உம்ரா (7), மகன் முகம்மது துல்ஷத் (5) ஆகியோருடன் ஏப். 23-ல் வெளியில் சென்றவர்கள், மீண்டும் வீடு திரும்பவில்லை. உறவினர் வீடுகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் மகன், மருமகள், பேரன், பேத்தியை கண்டுபிடிக்க முடியவில்லை. அவர்கள் நிலைமை என்னவென்று தெரியவில்லை. உரிய முறையில் விசாரித்து அவர்களை மீட்டு என்னிடம் ஒப்படைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக தெப்பக்குளம் போலீஸார் கமர்தீன், சமீம்பானு மற்றும் அவர்களது குழந்தைகள் மாயம் என வழக்குப் பதிவு செய்து தேடுகின்றனர். மேலும் தொழில் தொடர்பாக அவரது உறவினர்கள், யாரிடமும் பணம் வாங்கினாரா அல்லது கடத்தப்பட்டார்களா என்று பல்வேறு கோணத்திலும் விசாரிக்கின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
இந்தியா
4 hours ago
விளையாட்டு
5 hours ago
இந்தியா
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago
ஜோதிடம்
7 hours ago