போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது :

By செய்திப்பிரிவு

திருச்செங்கோடு அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தறித்தொழிலாளியை போலீஸார் கைது செய்தனர்.

திருச்செங்கோடு பகுதியை சேர்ந்தவர் தறித்தொழிலாளி புவனேஸ்வரன் (34). இவர் வீட்டில் தங்கியிருந்த உறவினரின் மகளான பிளஸ் 2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதில் மாணவி கர்ப்பமடைந்துள்ளார்.

மாணவியின் கர்ப்பத்தை உறுதி செய்த பெண் மருத்துவர் நாமக்கல் மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து புவனேஸ்வரனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல் திருச்செங் கோட்டில் 10 வயது சிறுமி யிடம் தவறாக நடக்க முயன்ற தாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கட்டிடத் தொழிலாளி தேவராஜ் (24) என்பவரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடிவருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

22 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

2 hours ago

சினிமா

2 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

மேலும்