பரமக்குடி அருகே விபத்தில் மூதாட்டி மரணம் :

By செய்திப்பிரிவு

பரமக்குடி அருகே பொட்டி தட்டி காலனியைச் சேர்ந்தவர் குமரையா(75). இவரும், இவரது மனைவி சண்முகவள்ளி(68), உறவினர்கள் லட்சுமி(50), லட்சுமி யின் மகள் பானுப்ரியா(23) ஆகியோர், கடந்த 6-ம் தேதி பொட்டிதட்டி கிராமத்துக்குச் சென்று வாக்களித்துவிட்டு, முனி யசாமி என்பவரது ஆட்டோவில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர்.

பொட்டிதட்டி-மஞ்சக் கொல் லை சாலையில் வந்தபோது அங்குள்ள செங்கல் சூளை அருகே ஆட்டோ கவிழ்ந்தது. இதில் சண்முகவள்ளி படுகாய மடைந்தார். மேலும் குமரையா, லட்சுமி, பானு ப்ரியா ஆகியோரும் காயமடைந்தனர். அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் சண்முகவள்ளி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மற்ற 3 பேரும் ராமநாதபுரம் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆட்டோ ஓட்டுநர் முனியசாமி மீது பரமக்குடி தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வணிகம்

15 mins ago

விளையாட்டு

56 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

க்ரைம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

3 hours ago

க்ரைம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

மேலும்