கரும்பு நிலுவைத் தொகை ரூ.33 கோடியை வழங்க கோரிக்கை :

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் பெரம்பலூர் சர்க்கரை ஆலை கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் மு.ஞானமூர்த்தி தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள மனுவில் தெரிவித்துள்ளது: பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2020-21-ம் ஆண்டு அரைவை பருவத்தில் 1.65 லட்சம் டன் கரும்பு அரைவை செய்யப்பட்டுள்ளது. சர்க்கரை ஆலைக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு தரவேண்டிய நிலுவைத் தொகை ரூ.33 கோடி உள்ளது. இதனால், கரும்பு விவசாயிகள், கரும்பு வெட்டுக் கூலி கொடுக்க முடியாமலும், வங்கிக் கடனுக்கு வட்டி, அபராத வட்டியை செலுத்த முடியாமலும் சிரமப்படுகின்றனர்.

2 லட்சம் மூட்டை சர்க்கரை விற்கப்படாமல் தேங்கியுள்ளது. ஒரு மாத சர்க்கரை உற்பத்தியில் 20 சதவீத சர்க்கரையை மட்டுமே விற்பனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதால், சர்க்கரை தேக்கம் ஏற்பட்டு ஆலைகள் நலிவடையும் நிலையில் உள்ளன. எனவே, மத்திய அரசு சர்க்கரை விற்பனைக்கான கட்டுப்பாடுகளை நீக்கி, ஆலைகள் லாபகரமாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏப்.13-ம் தேதிக்குள் கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், போராட்டம் நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

5 mins ago

சுற்றுலா

17 mins ago

தமிழகம்

48 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்