புதுச்சேரி மாநிலம், வில்லியனூர் அரசூர்பேட் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (54). ரியல் எஸ்டேட் பிரமுகர். இவர் நேற்று முன்தினம் இரவு கடைக்குச் சென்று விட்டு, வில்லியனூர் மூலக்கடை சித்தர் கோயில் அருகே புதுச்சேரி - விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார்.
அப்போது சுல்தான்பேட்டையில் இருந்து விழுப்புரம் நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று, ஆறுமுகம் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை, அப்பகுதியினர் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஆறுமுகம் ஏற்கெனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த புதுச்சேரி மேற்கு போக்குவரத்து போலீஸார், காரினை ஓட்டி விபத்து நடைபெற காரணமாக இருந்ததாக சென்னை ஆவடியைச் சேர்ந்த கார்த்திகேயனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
21 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இந்தியா
4 hours ago
தமிழகம்
5 hours ago
தமிழகம்
5 hours ago
ஜோதிடம்
5 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago