தேனி எம்.பி.யின் காரை தாக்கி சேதப்படுத்தியதாக 17 பேர் மீது வழக்கு :

By செய்திப்பிரிவு

தேனி எம்.பி., ரவீந்திரநாத் குமாரின் கார் மீது கல்வீசி சேதப் படுத்தியது தொடர்பாக 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப் பட்டது.

போடி தொகுதியில் அதிமுக சார்பில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட்டார். நேற்று முன்தினம் வாக்குப்பதிவின்போது துணை முதல்வரின் மகனும், எம்.பி.யுமான ரவீந்திரநாத்குமார், போடி அருகே பெருமாள்கவுண்டன்பட்டி வாக்குச் சாவடியைப் பார்வையிட்டார். அப்போது அவரது கார் மீது சிலர் கல்வீசி தாக்கினர். இதில் கார் கண்ணாடி சேதமடைந்தது. இதுகுறித்து எம்.பி.யின் கார் ஓட்டுநர் பெரியகுளம் தென்க ரையைச் சேர்ந்த பாண்டியன்(40), போடி தாலுகா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதில், ரவீந்திரநாத்தை சிலர் தாக்கி கொலை செய்ய முயன்றனர். தடுக்க முயன்ற என்னையும், பாதுகாவலர்களையும் தாக்க முயன்றதுடன், கார் கண்ணா டிகளை சேதப்படுத்தினர் என்று தெரிவித்திருந்தார்.

அதன்பேரில் பெருமாள்கவுண்டன்பட்டியைச் சேர்ந்த பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், மாயி, கார்த்திக் உட்பட 17 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களைத் தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

27 mins ago

தமிழகம்

1 hour ago

இலக்கியம்

6 hours ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

6 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்