‘49 பி’ சட்டப் பிரிவைபயன்படுத்தி வாக்களித்த திருச்சி இளைஞர் :

By செய்திப்பிரிவு

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை பகுதியைச் சே்ரந்தவர் ராமலிங்கம் மகன் ரமேஷ்குமார்(34). அபுதாபியில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். அண்மையில் ஊருக்கு வந்திருந்த இவர், மேல கல்கண்டார்கோட்டையில் உள்ள வாக்குச் சாவடிக்கு தனது வாக்கைச் செலுத்த சென்றார்.

அப்போது, அவரது வாக்கை வேறு யாரோ ஒருவர் செலுத்திவிட்டது தெரியவந்ததால், ரமேஷ்குமார் அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, வாக்குச்சாவடி அலுவலரிடம், தான் ரமேஷ்குமார் என்பதற்கான ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் ‘49 பி’ சட்டப் பிரிவைப் பயன்படுத்தி தனது வாக்கைச் செலுத்தினார்.

இச் சட்டப் பிரிவின்படி, ஒருவரது வாக்கை வேறு யாரும் பதிவு செய்திருந்தால், அதுகுறித்து தேர்தல் அதிகாரியிடம் தெளிவுபடுத்தி, வாக்குச் சீட்டு மூலம் வாக்கைப் பதிவு செய்யலாம். அதற்கு முன் படிவம் 17 பி-யில் அந்த வாக்காளர் தனது பெயரைப் பதிவு செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

56 secs ago

தமிழகம்

13 mins ago

சினிமா

42 mins ago

க்ரைம்

23 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

36 mins ago

தொழில்நுட்பம்

18 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்