சேலம்: தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. வாக்குப் பதிவினை முன்னிட்டு, தொகுதிக்கு தொடர்பில்லாத வர்கள் வெளியூர் களில் தங்கக்கூடாது என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. குறிப்பாக, தங்கும் விடுதிகள் போன்றவற்றில் வெளி மாவட்டத்தினர் யாரும் தங்க அனுமதி கிடையாது என்று அறிவித்தது.
இதனால், சேலம் மாவட்டத் தில் உள்ள தங்கும் விடுதிகளில் இருந்து, வெளிநபர்கள் வெளியேறுவதை போலீஸார் கண்காணித்து உறுதிப்படுத்தினர். இதில், ஏற்காடு சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள ஏற்காடு சுற்றுலா தலத்தில் போலீஸார் தங்கும் விடுதிகளில் சோதனை மேற்கொண்டு தொகுதிக்கு தொடர்பில்லாத வெளிநபர்கள் வெளியேறுவதை உறுதி செய்தனர். இதனால், ஏற்காட்டில் தங்கியிருந்த சுற்றுலா பயணிகள் நேற்று முன்தினமே அங்கிருந்து வெளியேறினர்.
கோடை வெயில் கத்திரி வெயிலைப்போல சுட்டெரிக்கும் நிலையில், அண்டை மாவட்டங்களைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் தங்க நேற்று அனு மதிக்கப்படவில்லை. இதனால், கடந்த சில நாட்களுக்கு முன்னர் வரை களைகட்டியிருந்த ஏற்காடு சுற்றுலா தலம் நேற்று பயணிகள் இன்றி வெறிச்சோடியது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
7 mins ago
தமிழகம்
35 mins ago
ஜோதிடம்
50 mins ago
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
இந்தியா
1 hour ago
சுற்றுலா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago