புதுச்சேரி ரெட்டியார் பாளையத்தில் மாநில தலைமை தேர்தல் அலுவலகம் இயங்கி வருகிறது. தற்போது தேர்தல் காலம் என்பதால் பல்வேறு பணி நிமித்தமாக அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சி பிரமுகர்கள் இந்த அலுவலகத்திற்கு வந்து செல்கின்றனர்.
இதனிடையே, இந்த அலுவலகத்தில் இருந்த ‘ரிசிவிட்’ என்ற எழுத்து பொறித்த ரப்பர் ஸ்டாம்பை காணவில்லை. இதை அலுவலகம் முழுவதும் தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை. அதனை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டனர். இது குறித்து அலுவலக பதிவு எழுத்தர் செல்லபாண்டியன் ரெட்டியார்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தேர்தல் அலுவலகத்தில் ரப்பர் ஸ்டாம்பை திருடிச் சென்ற நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago