சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும் விதித்து வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி வட்டத்துக்கு உட்பட்ட பக்கிரிமடத்தைச் சேர்ந்தவர் விக்னேஷ் (28). இவர், கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27-ம் தேதி அதேபகுதியைச் சேர்ந்த 7 வயது சிறுமியை தனது வீட்டுக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக சிறுமியின் பெற்றோர் வாணியம்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்பேரில், அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனர். இந்த வழக்கு வேலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கின் இறுதி விசாரணை நீதிபதி செல்வம் முன்னிலையில் நேற்று நடைபெற்றது.
அப்போது, விக்னேஷ் மீது சுமத் தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்ட தால் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விக்னேஷூக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்வம் நேற்று தீர்ப்பளித்தார். பாலியல் வன்கொடுமையில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற விக்னேஷூக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
34 mins ago
தமிழகம்
37 mins ago
தமிழகம்
47 mins ago
தமிழகம்
51 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago