புதுச்சேரி மாநிலத்தில் புதிதாக 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இதுவரை 97.88 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
இதுதொடர்பாக புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்ட தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 1,314 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 13, காரைக்காலில் 13, மாஹேவில் 4 என மொத்தம் 30 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39,824 ஆக உயர்ந்துள்ளது. இதில் மருத்துவமனைகளில் 71, வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 105 என மொத்தம் 176 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
நேற்று உயிரிழப்பு ஏதும் இல்லை. இதனால் இறப்பு எண்ணிக்கை 669 ஆகவும், இறப்பு விகிதம் 1.68 சதவீதமாகவும் உள்ளது.
நேற்று 20 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 38,979 (97.88 சதவீதம்) ஆக அதிகரித்துள்ளது.
புதுச்சேரியில் மொத்தமாக 6 லட்சத்து 35 ஆயிரத்து 847 பரிசோதனைகள் செய்யப் பட்டுள்ளன. இதில் 5 லட்சத்து 91 ஆயிரத்து 471 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.
32 நாட்களில் 10,398 சுகாதாரப் பணியாளர்களும், 21 நாட்களில் 2,495 முன்களப் பணியாளர்களும், 4 நாட்களில் 1,642 பொதுமக்களும் என 14,535 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இந்தியா
9 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago
ஜோதிடம்
11 hours ago