திருப்பத்தூரில் வரும் மார்ச் 23-ம் தேதி ‘அஞ்சல் குறைதீர்வு முகாம்’ நடைபெற உள்ளது.
இதுகுறித்து திருப்பத்தூர் அஞ்சலகங்களின் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந் திரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருப்பத்தூர் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் 23-ம் தேதி (செவ்வாய் கிழமை) காலை 11 மணியளவில் ‘அஞ்சல் குறைதீர்வு முகாம்’ நடைபெறவுள்ளது.
எனவே, திருப்பத்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட அஞ்சல கங்களில் உள்ள அஞ்சல் சேவை தொடர்பான பதிவுத்தபால், விரைவுத்தபால், மணியார்டர், சேமிப்பு கணக்குகள், சேமிப்பு பத்திரங்கள், சாதாரண தபால் பட்டுவாடா, அஞ்சலக ஆயுள் காப்பீடு மற்றும் கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு போன்றவற்றில் ஏதேனும் புகார் இருந்தால், அதற்கான முழு விவரங்களுடன் ‘அஞ்சல கங்களின் கோட்ட கண்காணிப் பாளர், திருப்பத்தூர் கோட்டம், திருப்பத்தூர் - 635 601’ என்ற முகவரிக்கு நேரடியாகவோ அல்லது தபால் மூலமாகவோ வரும் 17-ம் தேதிக்குள் வாடிக் கையாளர்கள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும், மார்ச் 23-ம் தேதி நடைபெறவுள்ள அஞ்சல் குறை தீர்வு முகாமில் நேரடியாக கலந்து கொண்டு, தங்களது கருத்து களை தெரிவிக்கலாம்’’ என தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
கருத்துப் பேழை
2 hours ago
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
7 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
9 hours ago
தொழில்நுட்பம்
10 hours ago
சினிமா
11 hours ago
க்ரைம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
11 hours ago