மேலப்பாளையம் 32-வது வார்டு பெரிய கொத்பா பள்ளிவாசல் கீழத் தெருவில் பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் வெளியேறி தெருவில் தேங்கியுள்ளது. இதனால் கடந்த 3 நாட்களாக அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. தெருவில் சிறுவர்கள் விளையாட முடியாத சூழலும் உள்ளது. இந்த சுகாதார சீர்கேடு குறித்து அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.
இந்நிலையில், எஸ்டிபிஐ கட்சியினரும், அப்பகுதி மக்களும் சுகாதார சீர்கேடு நிலவும் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்டிபிஐ கட்சியின் சமூக ஊடக அணி மாவட்ட தலைவர் காதர் மீரான், செயலாளர் செய்யது அலி கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
வாழ்வியல்
2 mins ago
விளையாட்டு
56 mins ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
சினிமா
2 hours ago
க்ரைம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
தொழில்நுட்பம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
தமிழகம்
3 hours ago