விதிமுறைகளை மீறிய 14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலிக ரத்து

By செய்திப்பிரிவு

திருத்தங்கல்லில் விதிமுறைகளை மீறிச் செயல்பட்ட 14 பட்டாசு ஆலைகளின் உரிமம் தற்காலி கமாக ரத்து செய்யப்பட்டது.

சாத்தூர் அருகே அச்சங்கு ளத்தில் உள்ள பட்டாசு ஆலையில் கடந்த மாதம் 12-ம் தேதி ஏற்பட்ட வெடி விபத்தில் 23 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். அதையடுத்து, மாவட்டத்தில் உள்ள 1,070 பட் டாசு ஆலைகளையும் ஆய்வு செய்வதற்காக வட்டாட்சியர்கள் தலைமையில் 7 கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. இவர்கள் பல்வேறு இடங்களில் உள்ள பட்டாசு ஆலைகளில் விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், திருத்தங்கல்லில் பிரபலமான பட்டாசு ஆலை ஒன்றில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அந்த பட்டாசு ஆலையில் மரத்தடியில் பட்டாசு தயாரிக்கப்பட்டதும், இரு அறைகளுக்கு இடையே வெளிப்புறத்தில் பட்டாசு தயாரி க்கப்பட்டதும், தீயணைப்பு சாதனங்கள் இல்லை என்பதும், உற்பத்தி செய்யப்பட்ட பட்டாசுகள் விதிமுறைகளை மீறி மண் தரையில் உலர வைக்கப்பட்டிருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து, அதி காரிகள் குழு மாவட்ட ஆட்சி யருக்கு அறிக்கை சமர்ப்பித்தது.

இதேபோன்று, சிறப்புக் குழுவி னரின் ஆய்வில் மீனம்பட்டியில் உள்ள ஒரு பட்டாசு ஆலை, அ.ராமலிங்கபுரம் பட்டாசு ஆலை, மேட்டமலையில் உள்ள 3 பட்டாசு ஆலைகள், இ.குமாரலிங் காபுரத்தில் உள்ள பட்டாசு ஆலை, அக்கரைப்பட்டியில் உள்ள ஆலை, வெம்பக்கோட்டையில் 4 பட்டாசு ஆலைகள், சேர்வைக்காரன் பட்டியில் உள்ள ஆலை, ஏழா யிரம்பண்ணை ஆலை என மொத் தம் 14 பட்டாசு ஆலைகளின் உரி மங்கள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை ஆட்சியர் இரா.கண் ணன் பிறப்பித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

58 mins ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

7 hours ago

சினிமா

7 hours ago

சுற்றுச்சூழல்

8 hours ago

உலகம்

8 hours ago

வாழ்வியல்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

10 hours ago

தமிழகம்

11 hours ago

சினிமா

11 hours ago

மேலும்