இது தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கை:
மதுரை மாவட்டத்தில் சுகாதாரத் துறை பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள், சட்டப் பேரவைத் தேர்தலில் பணியாற்ற உள்ள அனைத்துப் பணியாளர்களுக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இன்று முதல் 60 வயதுக்கும் மேற்பட்டோர், 45 வயது முதல் 59 வயது வரை நாள்பட்ட நோயாளிகளுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி போடப்படுகிறது.அனைத்து அரசு வட்டார சுகாதார நிலையங்களிலும், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களிலும், அரசு மருத்துவமனைகளிலும், அரசு ராஜாஜி மருத்துவமனையிலும் இலவசமாக போடப்படுகிறது. பயனாளிகள் கோவிட் செயலி மூலம் முன்பதிவு செய்தும், நேரடியாக சுகாதார மையங்களுக்குச் சென்றும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
அவ்வாறு செல்லும்போது ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றில் ஏதாவது ஒரு அடையாள அட்டையைக் கொண்டு செல்ல வேண்டும். முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் செயல்படும் தனியார் மருத்துவமனைகளில் ரூ.250 கட்டணம் செலுத்தி தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
சினிமா
50 mins ago
சினிமா
1 hour ago
சினிமா
3 hours ago
ஜோதிடம்
2 hours ago
ஜோதிடம்
2 hours ago
விளையாட்டு
8 hours ago
சினிமா
9 hours ago
இந்தியா
10 hours ago
தமிழகம்
11 hours ago
விளையாட்டு
11 hours ago
இந்தியா
11 hours ago