பெரம்பலூரில் நாளை தனியார் வேலைவாய்ப்பு முகாம்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் மற்றும் மாவட்ட நிர்வாகம் இணைந்து நடத்தும் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நாளை (பிப்.27) பெரம்பலூரில் ரோவர் பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது.

இம்முகாமில் சென்னை, காஞ்சிபுரம், ஓசூர், கோயம்புத் தூர், திருப்பூர், மதுரை, திருச்சி, பெரம்பலூர் பகுதிக ளில் அமைந்துள்ள 75-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங் கள் கலந்துகொண்டு, 10,000-க் கும் மேற்பட்ட காலிப் பணியிடங் களுக்கு 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, அக்ரி, நர்சிங், பார்மசி, பி.இ, பி.டெக், ஹோட்டல் மேனேஜ் மென்ட் மற்றும் ஆசிரியர் கல்வித் தகுதியுடையவர்களை தேர்வு செய்ய உள்ளன.

மேலும், தமிழக அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் பதிவு வழிகாட்டுதல்கள், தொழில் பழகுநர், குறுகிய கால திறன் பயிற்சிக்கு வழிகாட்டுதல், சுயதொழில், கடனுதவி தொடர்பான ஆலோசனைகளும் வழங்கப்பட உள்ளன.

விருப்பம் உள்ளவர்கள் ஆதார் எண், சுயவிவரக் குறிப்பு, கல்விச் சான்றிதழ்களுடன் நாளை காலை 8 மணி முதல் மதியம் 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாமில் கலந்துகொள்ளலாம். அல்லது www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்து பயன்பெறலாம் என ஆட்சியர் ப.வெங்கட பிரியா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

22 mins ago

விளையாட்டு

57 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 min ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

தமிழகம்

1 hour ago

வணிகம்

2 hours ago

தமிழகம்

52 mins ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்