ஓமலூர்- மேச்சேரி இடையே நாளை அதிவேக ரயில் சோதனை ஓட்டம்

By செய்திப்பிரிவு

சேலம்: ஓமலூர்- மேச்சேரி இடையிலான புதிய ரயில் பாதையில் நாளை (25-ம் தேதி) அதிவேக ரயில் இயக்கப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது.

சேலம் ரயில்வே கோட்டத்தில் சேலம்-மேட்டூர் அணை இடையிலான ரயில் பாதையில், ஓமலூர்- மேச்சேரி இடையே புதிதாக 2-வது அகலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. இப்பாதையில் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக தெற்கு வட்ட ரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், நாளை ஆய்வு செய்கிறார். அப்போது, ஓமலூர்-மேச்சேரி இடையே நாளை மதியம் 2 மணி முதல் மாலை 5 மணி வரை அதிவேகத்தில் ரயில் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளது. எனவே, ரயில் பாதையோரம் வசிக்கும் பொதுமக்கள் யாரும் ரயில் பாதை மற்றும் பாதையின் அருகே நடமாட வேண்டாம் என சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

23 mins ago

கருத்துப் பேழை

16 mins ago

தமிழகம்

3 mins ago

தமிழகம்

54 mins ago

சினிமா

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

வலைஞர் பக்கம்

2 hours ago

கல்வி

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்