திட்டக்குடி அடுத்த செங்கமேடு கிராமத்தைச் சேர்ந்த இங்கர்சால் மகன் சூர்யா (16), பிரகாஷ் மகன் பிரவீன் (16). இருவரும் இறையூரில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தனர். சூர்யாவுக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்பதால், சக மாணவர்கள் அன்றிரவு பிறந்தநாள் கொண்டாடினர். அப்போது நண்பர் ஒருவரை பெண்ணாடத்தில் விடுவதற்காக பிரவீன், சூர்யா ஆகியோர் பைக்கில் சென்று, அவரை விட்டுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். கூடலூர் அருகே வந்தபோது மணல் லாரியில் மோதி விபத்துக்குள்ளாயினர்.இதில் சூர்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பிரவீன் திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
முக்கிய செய்திகள்
தமிழகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
தமிழகம்
3 hours ago
சுற்றுலா
3 hours ago
வாழ்வியல்
4 hours ago
வாழ்வியல்
4 hours ago
தமிழகம்
4 hours ago
தமிழகம்
4 hours ago
சுற்றுச்சூழல்
4 hours ago
தமிழகம்
5 hours ago