சேலம்: சேலம் மத்திய சிறையில் விசாரணை கைதி தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் செண்பகமாதேவி பகுதியைச் சேர்ந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அசோக்குமார் (36). இவர் தனது நண்பருடன் சேர்ந்து 17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில், சேலம் அம்மாப்பேட்டை மகளிர் போலீஸார் கடந்த ஆண்டு மே மாதம் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், நேற்று அதிகாலை வார்டன்கள் சிறையில் ஆய்வு செய்தபோது, அசோக்குமார் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். சிறைத்துறை அதிகாரிகள் அவரது உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக சேலம் அஸ்தம்பட்டி போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில், அசோக்குமாருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை என்பதாலும், வழக்கில் தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது என்ற வேதனையில் இருந்த அசோக்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், இதுதொடர்பாக சேலம் குற்றவியல் நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தி வருகிறார்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
3 hours ago
ஜோதிடம்
3 hours ago
விளையாட்டு
6 hours ago
வணிகம்
8 hours ago
விளையாட்டு
8 hours ago
தொழில்நுட்பம்
9 hours ago
சினிமா
10 hours ago
க்ரைம்
10 hours ago
விளையாட்டு
11 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
11 hours ago
தமிழகம்
11 hours ago