ஈரோடு: ஈரோடு மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உட்பட்ட வெண்டிபாளையத்தில் இரண்டு ரயில்வே கேட்டுகள் உள்ளன.
திருச்சி மார்க்கம், சென்னை மார்க்கம் என இரண்டு வழித்தடத்திலும் ரயில் போக்குவரத்து தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும் என்பதால், அடிக்கடி ரயில்வே கேட் அடைக்கப்பட்டிருக்கும். இதனால் இப்பகுதியில் வசிக்கும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர், பள்ளி, கல்லூரி மற்றும் பணிக்கு செல்லும்போது பாதிக்கப்பட்டனர்.
இதையடுத்து இரு ரயில்வே கேட் அமைந்துள்ள பகுதிகளிலும், மேம்பாலம் அமைக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டது. அதில், வெண்டிபாளையம் முதல் ரயில்வே கேட் உள்ள இடத்தில் நுழைவு பாலம் அமைக்கப்பட்டது.
ரூ.2 கோடி மதிப்பில் கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு தொடங்கிய பணி தற்போது முடிந்து விட்டது. முறைப்படியான திறப்பு விழா வரை காத்திராமல், நேற்று முதல் இந்த பாலத்தில் வாகன போக்குவரத்து தொடங்கி விட்டது. ஆனால், பேருந்து சேவை இன்னும் தொடங்கவில்லை. நுழைவுபாலம் பயன்பாட்டுக்கு வந்ததால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
வாழ்வியல்
3 hours ago
தமிழகம்
5 hours ago
விளையாட்டு
5 hours ago
தமிழகம்
6 hours ago
ஓடிடி களம்
6 hours ago
இந்தியா
6 hours ago
இந்தியா
7 hours ago
கருத்துப் பேழை
7 hours ago
தமிழகம்
7 hours ago