திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே வீடு வாங்குவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த சிறுகிளாம்பாடி கிராமத்தில் வசித்தவர் விவசாயி துரைக்கண்ணு (45). இவருக்கும், அவரது உறவினர் துரை என்பவருக்கும் இடையே வீடு வாங்குவதில் போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில் வீடு வாங்குவது தொடர்பாக கடந்த 19-ம் தேதி மீண்டும் தகராறு ஏற்பட்டதில், இரண்டு தரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதில், படுகாயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துரைக்கண்ணு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார். இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து துரை, அவரது மனைவி தீபா, துரையின் தந்தை முனுசாமி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
க்ரைம்
8 mins ago
இந்தியா
17 mins ago
விளையாட்டு
18 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
4 hours ago
விளையாட்டு
8 hours ago
தமிழகம்
9 hours ago
விளையாட்டு
10 hours ago
வாழ்வியல்
10 hours ago