பேரூர்: தேசியப் பாதுகாப்பு படையின் சார்பில் அவ்வப்போது, பயங்கரவாத எதிர்ப்பு, விமானங்கள் கடத்தல் தடுப்பு ஒத்திகைகள் நடத்தப்படுவது வழக்கம். காவல் துறையினர், மருத்துவத் துறையினர் ஆகியோரின் செயல்திறனை அறிய இந்த ஒத்திகைகள் நடத்தப்படும். இந்நிலையில், கோவை ஈஷா யோகா மையத்தில் ஒத்திகை நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. தீவிரவாதிகள் குறித்த தகவல் கிடைத்ததும் ஆலாந்துறை காவல் துறையினர் மற்றும் மாவட்ட காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அதே நேரம் தேசிய பாதுகாப்பு படையை சேர்ந்த குழுவினர் ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். மருத்துவக் குழு, வருவாய் துறையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்ட பல்வேறு துறையினர் இந்த ஒத்திகை நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், சில இடங்களில் ஒத்திகை நடத்த தேசிய பாதுகாப்புப் படையினர் திட்டமிட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
11 mins ago
தமிழகம்
3 mins ago
தமிழகம்
44 mins ago
தமிழகம்
51 mins ago
இந்தியா
34 mins ago
க்ரைம்
1 hour ago
சுற்றுச்சூழல்
1 hour ago
இந்தியா
1 hour ago
சினிமா
1 hour ago
இந்தியா
2 hours ago
வர்த்தக உலகம்
2 hours ago
ஆன்மிகம்
1 hour ago