கோவை மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம்

By செய்திப்பிரிவு

அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி, கோவை கிழக்கு மாவட்ட திமுக பொதுக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் தலைமையில், குறிச்சி, சுந்தராபுரம், கிணத்துக் கடவு பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் திமுகவி னர் நேற்று, பாலக்காடு சாலை குனியமுத்தூரில் உள்ள மாநகராட்சி தெற்கு மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்ட னர்.

சாலை, சாக்கடை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு களை ஏற்படுத்தித் தர வலியுறுத்தி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.

பின்னர், குறிச்சி பிரபாகரன் உள்ளிட்டோர் மாநகராட்சி அதிகாரிகளை சந்தித்து மனு அளித்தனர். இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறும்போது, "தொண்டாமுத்தூர் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டுமே அதிக அளவில் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கிணத்துக்கடவு சட்டப்பேர வைத் தொகுதிக்கு உட்பட்ட சுந்தராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படுவதில்லை.

சாலைகள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளன. குடிநீரும் சீரான முறையில் விநியோகிக்கப்படுவதில்லை.

இதனால் மக்கள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். எனவே, சாலைகளைச் சீரமைத்து, குறிப்பிட்ட நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் விநியோகிக்க வேண்டும்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

க்ரைம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

மேலும்