கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி–வால்பாறை சாலையில், ஆழியாறு வனப் பகுதியில் அமைந்துள்ளது குரங்கு அருவி. இங்கு வனத் துறை சார்பில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அருவி அருகில் உள்ள சுவர்களில் புள்ளி மான்கள், வரையாடுகள் ஓவியங்கள் வரையப்பட்டு வருகின்றன. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு கருதி, தண்ணீர் விழும் பகுதியில் கம்பித் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குரங்கு அருவிக்கு வனத் துறையினர் ‘கவியருவி’ என பெயர் மாற்றம் செய்துள்ளனர். மேலும், குரங்குகளின் சிற்பங்களை வடிவமைத்து, அதில், ஐங்குறுநூறு, அகநானூறு உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் குரங்குகள் குறித்து பாடப்பட்டுள்ளதை கல்வெட்டாக வடித்துள்ளனர்.
இதுகுறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் ஆரோக்கியராஜ் சேவியர் கூறும்போது, "குரங்குகளுக்கு சங்க இலக்கியத்தில் பல பெயர்கள் உள்ளன. அதில், ‘கவி’ என்ற பெயரைத் தேர்வு செய்து, குரங்கு அருவிக்கு ‘கவியருவி’ எனப் பெயரிட்டுள்ளோம்.
அருவியில் ஒரு நீச்சல் குளம், நவீன கழிப்பிடம், கான்கிரீட் தளம் அமைத்து, தனியார் பூங்காபோல மாற்ற உள்ளோம். விரைவில் ஆழியாறு ‘கவியருவி’ சிறந்த சுற்றுலா மையமாக மாற்றப்படும்" என்றார்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
19 mins ago
தமிழகம்
22 mins ago
தமிழகம்
35 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
45 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
58 mins ago
தொழில்நுட்பம்
40 mins ago
விளையாட்டு
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
3 hours ago