சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரில் சமூக பொருளாதார கல்வி மற்றும் புனர்வாழ்வு சங்கம் என்ற பெயரில் சிறுமிகள் காப்பகம் செயல்பட்டு வந்தது.இதன் இயக்குநராக கல்யாணசுந்தரம் என்பவர் இருந்து வருகிறார்.
இந்த காப்பகத்தில் 18-க்கும் மேற்பட்ட சிறுமிகள் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 24-ம் தேதி இரவு 1098 என்ற குழந்தைகள் உதவி தொலைபேசி எண்ணுக்குசிறுமி ஒருவர் போன் செய்துள்ளார். அப்போது, காப்பகத்தில் பாலியல் தொல்லை தரப்படுவதாக புகார் தெரிவித்தார்.
இதனையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அதிகாரிகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றப்பிரிவு துணை ஆணையரின் தனிப்படை போலீஸார் காப்பகத்தில் விசாரணை நடத்தினர்.
பின்னர் காப்பகத்தில் இருந்த 18 சிறுமிகளை மீட்டனர். மீட்கப்பட்ட அனைவரும் சேத்துப்பட்டில் உள்ள ஒரு தனியார் தொண்டு நிறுவனத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
28 mins ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
3 hours ago
வணிகம்
3 hours ago
விளையாட்டு
4 hours ago
இணைப்பிதழ்கள்
4 hours ago
க்ரைம்
4 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
தமிழகம்
6 hours ago
உலகம்
6 hours ago
இந்தியா
8 hours ago