ஆம்பூர்: ஆம்பூர் தீயணைப்பு துறை சார்பில், தொலைபேசி செயலி குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, ஆம்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மேகநாதன் தலைமை வகித்தார். தீயணைப்பு வீரர்கள் ஆம்பூர் நகரின் முக்கிய சந்திப்புகளில் பொதுமக்களிடையே ‘தீ தொலைபேசி செயலி’ குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
தீயணைப்புத் துறையினரின் சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கும், தீ விபத்து, வெள்ளம், வன விலங்கு மீட்பு, ரசாயனம் மற்றும் விஷவாயு கசிவு, ஆழ்துளைக் கிணறு விபத்துகள் போன்ற அவசர உதவிகளுக்கு தீயணைப்பு துறையை எளிதில் அழைக்க தீ தொலைபேசி செயலியை பொதுமக்கள் தங்களுடைய தொலைபேசியில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், அவசர காலங்களில் அவற்றை பொதுமக்கள் முறையாக பயன்படுத்தி தீயணைப்பு துறையினரை உதவிக்கு அழைக்க வேண்டும் என விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
1 hour ago
ஜோதிடம்
1 hour ago
விளையாட்டு
5 hours ago
வணிகம்
6 hours ago
விளையாட்டு
7 hours ago
தொழில்நுட்பம்
8 hours ago
சினிமா
9 hours ago
க்ரைம்
9 hours ago
விளையாட்டு
9 hours ago
தமிழகம்
9 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago